ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம்: தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை
கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்த ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முன்னர் நடந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒழுக்க விரோத செயல்கள் என பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்க உள்ளதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அத்துடன் கைப்பற்றிய பணத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் மறுநாள் கையளிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு

அமைச்சர் டிரான் அலஸிடம் பணத்தை வழங்குமாறு தென்னகோன் கூறிய தொலைபேசி அழைப்பு தொடர்பான குரல் பதிவை, பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின் பணிப்பாளருக்கு வழங்குமாறு நீதவான் திலின கமகே, தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு உதவுமாறும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரிக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேசபந்து தென்னகோன் வழங்கிய தொலைபேசி அழைப்பு தொடர்பான கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் குறிப்பு சம்பந்தமான அறிக்கையும் நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 6 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam