பிரபல நட்சத்திர ஹோட்டல் மீதான விசாரணை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் கையளிப்பு
நிகழ்வு அமைப்பாளர் சந்திமால் ஜெயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்த அனுமதித்தமை தொடர்பில் கொழும்பில் உள்ள ஷங்க்ரிலா ஹோட்டல் மீதான விசாரணை,கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பிறந்த நாள் விழாவை நடத்தியதற்காக சண்டிமல் ஜெயசிங்க மற்றும் பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட பலரை கொழும்பு கோட்டை பொலிஸார் கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிறந்த நாள் விழாவை நடத்த அனுமதித்ததற்காக ஹோட்டலின் நிர்வாகத்திற்கு எதிராக கோட்டை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர் .
அதன்படி, ஹோட்டல் நிர்வாகத்திடம் கோட்டை பொலிஸ் வாக்குமூலத்தை பதிவு
செய்திருந்தது.
இந்த நிலையில் விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஒப்படைக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 19 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
