ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இராஜாங்க அமைச்சர்கள் குறித்து விசாரணை
ஒலிம்பிக் போட்டிகளைக் காண ராஜாங்க அமைச்சர்கள் தெனுக விதானகமகே, டி.வி.சானக மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இன்றைய வாராந்த அமைச்சரவை செய்தி மாநாட்டில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த ஊடக அமைச்சர்,
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் மூன்று ராஜாங்க அமைச்சர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்தமை மற்றும் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசியக் கொடியைக் காட்டத்தவறியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
அரசாங்க செலவினங்களை முடிந்த வரை குறைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷக் கோரியிருந்த நேரத்தில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சேர்ந்து மூன்று ராஜாங்க அமைச்சர்கள், ஜப்பான் சென்றமை குறித்தே செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்கு தெரிந்தவரை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையிலேயே சென்றுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் அவர்களின் சுற்றுப்பயணத்திற்கு ஒரு ரூபாயைக்கூட செலவிடவில்லை. எவ்வாறாயினும், உண்மையை வெளிப்படுத்த ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

தீவிரமாகும் போர்ச்சூழல்... இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாய் ரஷ்யாவை எதிர்கொள்ள தயாராகும் நேட்டோ அமைப்பு News Lankasri
