ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி

United Russia Russo-Ukrainian War Sri Lanka Economic Crisis Sri Lanka Ukraine
By Dhayani Jul 01, 2022 10:20 PM GMT
Report

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்கள் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட்  கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பிலான 46.1 என்ற தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி | Injustice To Tamils In Un Security Council Issue

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

பிரித்தானியா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு புதிதல்ல. இதே நிலைப்பாட்டினை முன்னரும் ஒரு தடவை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதில் முன்னிற்று உழைத்த பிரித்தானியா, இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை பயன்படுத்த தயங்குவது ஏமாற்றத்தையே தருகின்றது.

ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி | Injustice To Tamils In Un Security Council Issue

குறிப்பாக சமகாலத்தில் உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியா உட்பட மேற்குலகம் நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றுள்ளன.

பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றப்படாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன.

உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதியா?

உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி, தமிழ் மக்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்வி எழுகின்றது.இலங்கையின் மனித உரிமை மீறல்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில் கையாளப்படட்டும். ஆனால் இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை என்பது ஐ.நா பாதுகாப்புச் சபையூடாகவே கையாளப்பட வேண்டியுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி | Injustice To Tamils In Un Security Council Issue

பொறுப்புகூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த, இலங்கை விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுங்கள். அப்போது நீதிக்கு எதிரானவர்கள் யார் என்பது தெரியவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2021 ஜனவரி 12ம் திகதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிசேல் பச்சலேற் அம்மையாரின் அறிக்கையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்திருந்ததோடு, ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு பயணம் செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா. செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய நிபுணர்கள் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு  அழைப்பை விடுத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US