இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதியின் முக்கிய சகா ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் சம்பவம் தொடர்பாக இனிய பாரதி என்றழைக்கப்படும் கந்தையா புஷ்பராஜா தற்போதைக்கு குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சகா ஒருவர் கொழும்பில் கைது
இந்நிலையில் இனிய பாரதி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அவரது முக்கிய சகா ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு கைது செய்யப்பட்டுள்ள நபர், இனிய பாரதி மேற்கொண்ட படுகொலைகளின் துப்பாக்கிதாரியாக இருந்துள்ளதுடன், பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுத் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri