இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இந்திய (India) அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 58,200 ஈழத்தமிழ் ஏதிலிகள் தமிழ்நாடு முழுவதும் 104 முகாம்களில் வசித்து வருவதோடு 33,200 இற்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர்.
வாக்களிக்கும் உரிமை
இந்தநிலையில் ஒரே ஒரு ஈழத் தமிழரான நளினி கிருபாகரனுக்கு மட்டுமே இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகாம்களில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.
இருப்பினும், சுகாதார சேவைகள் அல்லது குடியுரிமைகள் கிடைக்காமல் மோசமான அகதிகள் முகாம்களில் அவர்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam