அறுவை சிகிச்சையின் பின்னர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தீவிர இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தாம் வித்தியாசமான கண்ணோட்டத்துடனும்,வித்தியாசமானவராக மீண்டும் தாம் வருவதாக ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
மேலும்,பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும், தாம், தமது காலில் நிற்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இது ஒரு அதிசயம். கடவுளுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதய பிரச்சினைக் காரணமாக ஹரின் பெர்னாண்டோவுக்கு அண்மையில் இரண்டாவது பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.