காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் காற்று தர குறியீட்டின் (SL AQI) படி, கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலான காற்றின் தரம் பதிவாகியுள்ளது,
அதே நேரத்தில் கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நல்ல அளவிலான காற்றின் தரம் காணப்பட்டது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம், அடுத்த 24 மணி நேரத்தில் AQI அளவு 38 முதல் 72 வரை இருக்கும் என்று கணித்துள்ளது.
பெரும்பாலான நகரங்களில்..
இது பெரும்பாலான நகரங்களில் மிதமான காற்றின் தரத்தையும், கேகாலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறையில் நல்ல காற்றின் தரத்தையும் குறிக்கிறது.
அதிகபட்ச AQI அளவுகள் காலை 7:30 - 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 - 2:00 மணி வரை எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணிநேரங்களுக்கு காற்றின் தரன் நல்ல மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |