பிரியந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல் வெளியானது
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியையகள் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி அரச அனுசரணையுடன் அவரது இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளன.
பாகிஸ்தானில் உயிரிழந்த பிரியந்த குமார தியவடனவின் உடல் பாகங்கள் இன்று மாலை 5 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கனேமுல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.