முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் எழுந்தமானமாக பதியப்படும் மாணவர் வரவுப் பதிவு! வெளியான ஆதாரம்
முல்லைதீவு வலயத்தின் புதுக்குடியிருப்பு கோட்டத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் வரவு பதிவேட்டை ஆசிரியர்கள் எழுந்தமானமாக பதிந்து வருகின்றமை ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் திட்டத்தின் கீழ் மாணவர் வரவு பதிவேடானது பதிவதற்காக முதலாம் பாட வேளையின் முடிவில் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர் பதிவேட்டை ஓர் நியதி ஆவணமாக கையாண்டு நாளாந்த அடிப்படையில் குறித்த வகுப்பாசிரியர்கள் அல்லது ஏனைய ஒரு ஆசிரியரினால் பதியப்பட வேண்டியது அவசியமாகும்.
வரவு பதிவேடு
இருந்தபோதிலும் மேற்குறித்த பாடசாலையில் கடந்த இரண்டாம் மாதம் மாணவி ஒருவர் வண்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த மாணவி பாடசாலைக்கு வருகை தந்ததாக அந்நாள் வரவு பதிவேட்டில் வரவு பதியப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பாடசாலையில் மாணவர் வரவு புத்தகத்தை ஆசிரியர்கள் தான் பயன்படுத்துகிறார்களா அல்லது மாணவர்களை பயன்படுத்தி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பதியப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகள், படசாலைக்கு ஒழுங்காக வரும் மாணவர்களை பாதிப்பது மட்டுமில்லாமல் மாணவர்கள் வெளியிடங்களில் முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வழி வகுக்கும் என கூறப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri
