இந்திய - இலங்கை உறவு பாராட்டப்பட வேண்டும்: ஷெஹான் சேமசிங்க
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் ஆதரவு எப்போதும் பாராட்டப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (02.03.2023) நடைபெற்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கான வலுவான இருதரப்பு பொருளாதார கூட்டு மற்றும் பகிர்ந்த செழுமையை நோக்கிய கலந்துரையாடலில் கலந்துகொண்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம்
இதன்போது பல கடினமான தீர்மானங்களை எடுக்கும் அதேவேளையில் பொருளாதாரத்தில் காணக்கூடிய மாற்றத்திற்கு இலங்கை எவ்வாறு வந்துள்ளது என்பதை இராஜாங்க அமைச்சர் இதன்போது சுருக்கமாக விளக்கியுள்ளார்.

நிதி உத்தரவாதம்
இதற்கமைய மக்கள் கஷ்டப்படுகிறார்கள், ஆனால் அது, நிச்சயமாக அவர்களை வலுவான பொருளாதார மீட்சியை விரைவில் அடையச் செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நீண்டகால நண்பராக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு தேவையான நிதி
உத்தரவாதத்தை வழங்குவதில் இலங்கைக்கான ஆதரவு, கடன் வரிகளுடன், சவாலான
சூழ்நிலைகளில் ஆதரவளிப்பதில் இந்தியாவின் சரியான நேரத்தில் தலையீடு எப்போதும்
பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam