அமெரிக்காவில் திபெத் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக இந்திய பெண் நியமனம்
திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளி பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி பெண்ணான மூத்த பெண் தூதரக அதிகாரியான உஸ்ரா ஷீயாவே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனா கடந்த 1959 ஆம் ஆண்டு திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், 13 ஆம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி வருகின்றது.
இந்நிலையில், திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதமாக திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளது.
இந்த நியமனத்திற்கு சீனா தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் திபெத் மீதான பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்கு ஆதரவாக சீனாவுக்கும், திபெத் தலைவர் தலாய் லாமா அல்லது அவரது பிரதிநிதிகளுக்கும் இடையே கணிசமான உரையாடலை ஊக்குவிக்கும் பணியை உஸ்ரா ஷீயா பெற்றுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த அதிகாரியாக தனது தூதரக பணியை உஸ்ரா ஷீயா, தொடங்கியுள்ளார்.
2018-ம் ஆண்டு அமெரிக்காவின்முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியுறவு துறையில் இருந்து அவர் விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.