இந்திய விசா விண்ணப்ப மையத்தில் திருட்டு! ஐவர் கைது
கொழும்பு, பிலிப் குணவர்தன மாவத்தையில் செயற்பட்டு வரும் இந்திய விசா விண்ணப்ப மையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் பெண் சுகாதார ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் பெப்ரவரி 15ஆம் திகதி சில நாட்களுக்கு மூடப்பட்டு திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
முன்னதாக, பெப்ரவரி 14 ஆம் திகதி விசா மையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழுவொன்று பல உபகரணங்களைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்திருந்தார்.
விசாரணைகள் ஆரம்பம்
இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் இருந்து 300,000 ரூபா பெறுமதியான மடிக்கணினி, டி.வி.ஆர், கேமரா மற்றும் ஐ-பொட் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேகநபர்கள் உபகரணங்களை திருடுவதற்காக அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக, அலுவலகத்தை உடைத்துள்ளார்கள் என்பது குறித்து விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தையில் வசிக்கும் 53 வயதுடைய இரு சந்தேகநபர்களும், கிருலப்பன மற்றும் திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் 49 மற்றும் 54 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் துப்புரவுப் பணியாளரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
