சீனாவின் உளவுக்கப்பலுக்கு சவால் விடும் இந்திய கப்பல்-செய்திகளின் தொகுப்பு
சீனாவின் உளவுக் கப்பல் இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குறித்த கப்பலை எதிர்க்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளதா என்ற கேள்வி அதிகரித்து வருகின்றது.
சீனாவிடம் உள்ள உளவுக் கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமானதும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டதுமான "யுவான் வாங் 5" போர் கப்பல்களின் மூளை என்று வர்ணிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் "செயற்கைக்கோள் உளவு மற்றும் ஆய்வுக் கப்பல்" என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.
இத்தகைய அதிநவீன அம்சங்கள் கொண்ட சீன உளவுக் கப்பலை எதிர்க்கும் வல்லமை கொண்ட கப்பல் இந்தியாவிடம் உள்ளதா என உலக நடுகள் இந்தியாவின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் துருவ் கப்பல் சீன உளவுக் கப்பலை எதிர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது என வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறனை இக் கப்பல் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,