எனது பிள்ளையை என்னிடம் அனுப்பி வையுங்கள்! சாந்தனின் தாயார் விடுத்துள்ள கோரிக்கை (Video)
இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது மகனை மனச்சாட்சியின் அடிப்படையில் விடுதலை செய்தவர்கள் மீண்டும் மகன் தன்னுடன் வந்து சேர்வதற்கு பிரதமர் மோடி உட்பட அனைத்து தலைவர்களும் வழிவகை செய்ய வேண்டும் எனவும், எனது கண் பார்வை கெட்டு போவதற்கு முன்னதாக மகனை பார்க்க வேண்டும்.
2022 கார்த்திகை மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்ட எனது மகன் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த போதிலும் இது வரையிலும் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை. மகன் இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை பத்திரிக்கை வாயிலாக அறிந்து கொண்டேன்.பிரதமர் மோடி எனக்கு மகன் போன்றவர். நான் அவரிற்கு தாய் போன்றவர். ஆகவே அவர் எனது மகனை என்னுடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் வாழ போகும் இன்னும் கொஞ்ச நாட்களை எனது பிள்ளையுடன் வாழ ஆசைப்படுகின்றேன். தயவுசெய்து எனது பிள்ளையை என்னிடம் அனுப்பி வையுங்கள்.32 வருடங்களாக எனது பிள்ளையை பிரிந்து வாழ்கின்றேன். மோடி ஐயா மனது வைத்தால் எனது பிள்ளையை என்னுடன் சேர்க்க முடியும். அப்படி நீங்கள் செய்தால் அது பேருதவியாக அமையும்.
நான் இன்னும் கொஞ்ச நாட்களே உயிருடன் இருப்பேன். இங்கிருக்கும் 3 பிள்ளைகளும் எனது உயிரை பிடித்து வைத்துள்ளனர். என்னால் கஷ்டப்படுகின்றனர். அங்கிருக்கும் பிள்ளையோ என்னைப் பார்க்க முடியாது தவிக்கின்றது.பிள்ளை வர போவதாக எல்லா விதமான சாப்பாட்டு பொருட்களையும் வாங்கி வைத்தேன். அவை காலாவதியாகிவிட்டன.
உங்களுக்கு அம்மா இருந்தால் சிந்தித்து பாருங்கள். அதை விட மோசமான நிலையிலே நான் உள்ளேன். 32 வருடங்களாக பிள்ளையின் குரலை கேட்கவோ அல்லது முகத்தை பார்க்கவோ இல்லை. பிள்ளையும் அந்த நிலையிலே உள்ளது.
பாவம் செய்த குடும்பமாகவும் வித்தியாசமாக தியாகம் செய்த குடும்பமாகவும் நாம் உள்ளோம். பிள்ளை இங்கு வருகின்ற வேளையில் ஒரு மாதமாவது நான் சமைத்து கொடுக்க வேண்டும். மகனின் குரலை கேட்பதற்காவது ஏதேனும் வழிவகை செய்து தாருங்கள்.
மகனை அலைந்து திரிந்து பார்க்கும் அளவில் எனது உடல் நிலை இல்லை.
ஆகவே பிரதமர் மோடி எனது மகனை என்னிடம் சேர்ப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்பதை
மன்றாட்டமாக கேட்டு கொள்கின்றேன் என்றும் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
