இலங்கை ஏதிலிகளுக்கான கடவுச்சீட்டு.. இந்தியா நீதிமன்றின் உத்தரவு

Refugee Sri Lankan Tamils Government Of India India Passport
By Amal Aug 02, 2025 07:07 AM GMT
Report

இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று தமிழக நீதிமன்றம் ஒன்று, இந்திய மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் பிறந்தாலும், அகதிகளாக இருக்கும் நிலையில், நாடற்றவர் என்ற வகுதிக்குள் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடவுச்சீட்டுக்கான தமது விண்ணப்பத்தை பரிசீலித்து இந்திய கடவுச்சீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஹரினா என்பவர் 2024 இல், தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தபோதே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுதாரர் 2002இல் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்தார்.

மீள்பரிசீலனை 

அவரது பெற்றோர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் இந்தநிலையில் மனுதாரர் இந்தியாவில் தனது பாடசாலை மற்றும் பட்டப்படிப்பை முடித்த பின்னர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இலங்கை ஏதிலிகளுக்கான கடவுச்சீட்டு.. இந்தியா நீதிமன்றின் உத்தரவு | Indian Passports For Sri Lankan Refugees

எனினும் இந்திய கடவுச்சீட்டுக்கான தமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அணுகியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு, இந்திய கடவுச்சீட்டுக்கான தனது விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் 2023 ஆம் ஆண்டு புதிய பயண ஆவணத்திற்கு விண்ணப்பித்தார்.

இருப்பினும், அவரது கோரிக்கையை ஏற்று, வெளியுறவு அமைச்சகம் கடவுச்சீட்டையோ அல்லது பயண ஆவணத்தையோ வழங்கவில்லை. மாறாக, மனுதாரர் இந்திய குடிமகன் இல்லை என்ற காரணத்தினால் அவர் கடவுச்சீட்;டை பெற விண்ணப்பிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சு நீதிமன்றுக்கு பதிலளித்திருந்தது அத்துடன் அவர் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்தை அணுகுவது நல்லது என்றும் அமைச்சு தெரிவித்திருந்தது.

விண்ணப்பம் 

இந்தநிலையில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் இந்தியாவில் பிறந்தவர் என்றும், இலங்கைக் குடிமகனாகவோ அல்லது இலங்கையின் குடிமகனாகவோ பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

இலங்கை ஏதிலிகளுக்கான கடவுச்சீட்டு.. இந்தியா நீதிமன்றின் உத்தரவு | Indian Passports For Sri Lankan Refugees

மனுதாரர் நாடற்றவராகவே அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். மனுதாரர் இந்தியாவில் பிறந்தவர் என்பதையும், கரூர் மாவட்டம், தான்தோணி டவுன் பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரியால் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதையும் அவர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவருக்கு இந்தியாவில் ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரர் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை மேல் நீதிமன்றில் மதுரைக்கிளை இரத்து செய்தது.

அத்துடன், மனுதாரரின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிட்டு;ள்ளது. அத்துடன் வழக்கு தொடர்பான முழு நடவடிக்கையையும் மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US