இலங்கை நபருக்கு இந்திய கடவுச் சீட்டு! விசாரணைகள் தீவிரம்
இலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய கடவுச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக, கடவுச்சீட்டு அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய கடவுச் சீட்டு வழங்கியதாக கடவுச் சீட்டு அலுவலக கண்காணிப்பாளர் உள்பட மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது .
மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் வீரபுத்திரன், இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியர் எனக் கூறி, சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதும், அதற்காக 45 ஆயிரம் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பாளர் வீரபுத்திரன், கடவுச் சீட்டு வாங்கியவர் உள்ளிட்ட மூவர் மீதும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
