இலங்கை நபருக்கு இந்திய கடவுச் சீட்டு! விசாரணைகள் தீவிரம்
இலங்கையைச் சேர்ந்தவருக்கு இந்திய கடவுச் சீட்டு வழங்கப்பட்டது தொடர்பாக, கடவுச்சீட்டு அதிகாரி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்தவருக்கு சட்டவிரோதமாக இந்திய கடவுச் சீட்டு வழங்கியதாக கடவுச் சீட்டு அலுவலக கண்காணிப்பாளர் உள்பட மூவர் மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது .
மதுரை மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் வீரபுத்திரன் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் வீரபுத்திரன், இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியர் எனக் கூறி, சட்டவிரோதமாக கடவுச் சீட்டு வழங்கியதும், அதற்காக 45 ஆயிரம் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பாளர் வீரபுத்திரன், கடவுச் சீட்டு வாங்கியவர் உள்ளிட்ட மூவர் மீதும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam