அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவன் கொடூரமாக கொலை
அமெரிக்காவில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த இந்திய வம்சாவளி மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவரான வருண் மணிஷ் ஷேடா (வயது 20) அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டு பல்கலைக்கழகத்தில் ( Purdue University ) அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.
இவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை(5.10.2022) உயிரிழந்துள்ளார்.
கொரிய நாட்டை சேர்ந்த சக மாணவர் கைது
மணிஷ் ஷேடா இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து அவரது விடுதி அறையில் தங்கியிருந்த கொரிய நாட்டை சேர்ந்த ஜி மின் ஷா (வயது 22) என்ற மாணவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு பிறகே மணிஷ் ஷேடா கொலை செய்யப்பட்டது எதனால்? யாரால் கொல்லப்பட்டார்? ஆகிய விவரங்கள் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மணிஷ் ஷேடா உடல் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில் காயங்கள் அடைந்து உயிரிழந்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.