இந்து சமுத்திர வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம்
இந்து சமுத்திர வலய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கிடைத்துள்ளமை எமது நாட்டுக்கு கிடைத்த அங்கிகாரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகாெத்தவில் நேற்று(09.10.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்து சமுத்திர வலய மாநாடு
இந்து சமுத்திர வலய மாநாடு நாளை(11.09.2023) எமது இலங்கையில் இடம்பெற இருக்கிறது.
இந்த மாநாட்டை எமது நாட்டில் நடத்த கிடைத்திருப்பது எமக்கு பெரும் கெளரவமாகும். அதேபோன்று அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இந்து சமுத்திர வலய மாநாட்டின் தலைமை பதவி இலங்கைக்கு வழங்கப்பட இருக்கிறது.
தற்போது இம்மாநாட்டின் தலைமை பதவியை பங்களாதேஷ் வகித்து வருகிறது. அத்துடன் இந்த மாநாட்டுக்கு வலயத்தில் இருக்கும் வெளிவிவகார அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஜனாதிபதி எடுத்துவரும் வேலைத்திட்டம்
அவர்கள் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்கள், பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த இருக்கின்றனர்.
இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலேசிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ். ஈரான், ஓமான், இந்துனேசியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மேலும் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாடுகளின் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும், இந்து சமுத்திர வலய மாநாடு எமது நாட்டில் நடத்த அனுமதி கிடைத்திருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும்.” என தெரிவித்துள்ளார்.

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
