இலங்கைக்கு உணவு அனுப்புவது தொடர்பில் தமிழக அமைச்சரின் எச்சரிக்கை
அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
தமிழக அரசாங்கம் 40,000 தொன் அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 10 கிலோ பைகளில் அரிசியை பொதி வழங்குவதற்காக ஐம்பத்தொரு அரிசி ஆலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள நல்ல தரமான அரிசி வகைகள், தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற துறைமுகங்களுக்கு போக்குவரத்து செலவு உட்பட ஒரு கிலோ 33.50 ரூபாவுக்கு மாநில அரசாங்கத்தினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு சிலர், இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து 20 ரூபாய்க்கு அரிசி கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் பொது விநியோகத் திட்டத்துக்கான அரிசியை அனுப்புவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் சக்கரபாணி, தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும என்று எச்சரித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri