இங்கிலாந்தில் இந்தியரொருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு
இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங் (வயது 28) என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 இலட்சத்து 99 ஆயிரம் மதிப்புடைய நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை இந்தியர் உட்பட மூவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி லண்டனின் கிழக்கு பகுதியில் அப்மின்ஸ்டர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது 11 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாட்டிற்கமைய, புலனாய்வு விசாரணையை தொடர்ந்து 3 பேரை பொலிஸார் கண்டுபிடித்து, கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த இறுதி விசாரணையில் அஜய்பால் சிங் உட்பட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் அஜய்பால் சிங்குக்கு 20 ஆண்டுகளும், ஆன்டனி லாஸ்கெல்லசுக்கு 18 ஆண்டுகளும், கிறிஸ்டோபர் சார்ஜென்டுக்கு 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
