இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கும் இந்திய முகவர்கள்
இலங்கையர்களுக்கு மோசடியான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுத்த இந்திய தரகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டுகள்
கடந்த 12 ஆம் திகதி இரவு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில், கடவுச்சீட்டுகள் கைமாற்றப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வசிக்கும் 28 இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
