கடலட்டை பண்ணை வளர்ப்புக்கு முன்வந்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்: டக்ளஸ் தேவானந்தா கருத்து
இலங்கையில் கடலட்டை பண்ணை வளர்ப்புக்கு சீனா ஆதரவளித்துள்ள அதேவேளை இந்திய முதலீட்டாளர்களும் தற்போது கடலட்டை பண்ணை வளர்ப்புக்கு முன்வந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (06.12.2022) உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடலட்டை பண்ணை வளர்ப்புகளுக்கான கடலட்டை இனப்பெருக்க கருத்தரிப்பு நிலயங்களை ஆரம்பிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான எவ்வித அனுமதியையும் கடற்தொழில் அமைச்சு இதுவரை வழங்கவில்லை.
இந்நிலையில் வடக்கில் சீனா கடலட்டை பண்ணைகளை கைப்பற்றியுள்ளதாக ஒரு கதை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,