பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி ஈஸ்டர் தாக்குதலை அறிந்த இந்திய புலனாய்வு பிரிவினர்
பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணித்தன் காரணமாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான தகவல்கள் இந்திய புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே கிடைத்ததாக தெரியவந்துள்ளது.
சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரின் அலைபேசி இலக்கங்களை மூட இந்திய புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர்.
அத்துடன் சஹ்ரான் பயன்படுத்திய திரிமா என்ற மென்பொருள் ஊடாக அனுப்பிய தகவல்களை கூட பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்டறிய முடியும்.
இதன் காரணமாகவே இந்திய புலனாய்வுப் பிரிவின் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நான்கு முறை இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு எச்சரித்திருந்ததாக திவயின பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பான பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் ராகுல் காந்தி உட்பட 300க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது இந்திய அரசியலில் ஏற்கனவே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.