பிரதமரை சந்தித்து நன்றி தெரிவித்த கோபால் பாக்லே
Dinesh Gunawardena
India
Sri Lanka Government
By Sivaa Mayuri
a year ago
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை பிரதமரை சந்தித்து பிரியாவிடை பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இதன்போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் வலுவான உறவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை உறவு
இந்த ஆதரவு தனக்கு பின்னர் பதவியேற்கும் உயர்ஸ்தானிகருக்கும் வழங்கப்படும் என்று அவர் முழு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் மிகவும் கடினமான காலங்களில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்காக உயர்ஸ்தானிகருக்கு, இலங்கையின் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கோபால் பாக்லே, கர்தினால் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து, இந்தியா-இலங்கை உறவுகளின் நாகரீக தொடர்புகள் குறித்து ஆராய்ந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US