64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்
இலங்கை கடற்படையினரால் அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்ட 64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் சங்;கத்தினர் தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் இந்த போராட்டத்தை நடத்தினர்.
நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில்,புதிய தமிழக தலைவர் கே.கிருஸ்ணசாமியும் பங்கேற்றார்.

படகுகள் பறிமுதல்
கடந்த அக்டோபர் 14ஆம் திகதி 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து 5 படகுகளையும் கைப்பற்றியது. அக்டோபர் 28 அன்று, 37 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஐந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தநிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்த 64 கடற்றொழிலாளர்கள் இன்னும்
இலங்கையால் விடுவிக்கப்படவில்லை.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan