ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய மேலாளருக்கு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிப்பு
இந்தியப் பெண் ஊழியர்களில் ஒருவரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய மேலாளருக்கு இந்திய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய மேலாளர் லலித் டி சில்வாவை இந்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி அஜய் வர்மா( Ajay Verma) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் லலித் டி சில்வா, இந்தியாவின் புதுடெல்லியில் விமான நிறுவனத்திலிருந்த காலத்தில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்தியப் பெண் ஊழியரை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில், இந்திய நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது.
இருப்பினும், கோவிட் சூழ்நிலையின் விளைவாக, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக இந்தியா செல்லவில்லை என்று மன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிவான் தேவ் சரோஹா தனது உத்தரவில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட குமிழி ஒப்பந்தத்தின்படி இலங்கை மற்றும் இந்தியா இடையே பயணிகள் விமானங்கள் இயக்கப்படுவதால் இலங்கையில், செல்லுபடியாகும் பயண அங்கீகாரம் / ஆவணங்கள் உள்ள எந்தவொருவரும் விமானங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குப் பயணம் செய்யலாம்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குமிழி ஒப்பந்தம் 09.04.2021க்கு பின்னரே செய்துகொள்ளப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் ஆனால் அதன் பிறகும் குற்றவாளி இந்தியாவுக்கு வர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான குமிழி ஒப்பந்தத்தின் விதிகளைத் தவறாக விளக்குவது மற்றும் விசாவுக்கு விண்ணப்பிக்கக் குற்றவாளியின் எந்த முயற்சியும் குற்றவாளி இந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதற்கான நோக்கத்தைக் காட்டுகிறது குறிப்பிட்டுள்ளார்.
எனவே குற்றவாளிக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத உத்தரவை நீதிவான் பிறப்பித்தார் மற்றும் குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.