அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தொடர்பில் தமிழக அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 63 க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் தற்போது தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட 63 படகுகளை மீட்க தமிழக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என்று தமிழக அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடல் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளைச் செய்வதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்றும் தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.