இலங்கை வந்து சென்ற சீன அமைச்சர்! - பிரதமருடன் இந்திய தூதர் அவசர சந்திப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்திருநது சீன பாதுகாப்பு அமைச்சர் நேற்று காலை தனது விஜயத்தை நிறைவு செய்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது.
இதேவேளை, இந்தியா கோவிட் பெருந்தொற்றினால் எதிர்நோக்கியுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய பிரதமர் மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கோவிட் தொற்று அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை இந்தியா மிக விரைவில் முறியடிக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியாவின் தற்போதைய நிலை தொடர்பில் தனது கவலையையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.