இலங்கை அரசியலின் இரகசிய நகர்வால் வியப்பில் இந்தியா!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜே. ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் எம்பிக்கள் முன்வைத்த கருத்தானது இந்தியாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கு காணி அதிகாரங்கள் வழங்குவதாக தென்னிலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள் எடுத்துரைத்தமையை அறிந்தே இந்திய வெளிவிவகார அமைச்சர் வியப்படைந்ததாக அவர் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்த அவர்,
''இலங்கை அரசாங்கமானது தமிழர்களுக்கு காணி அதிகாரங்களை வழங்கினாலும் இந்தியாவானது அதனை எதிர்க்கும் ஒரு நகர்வை மேற்கொள்ளும் என அறியமுடிகிறது.
இதன் உறுதிப்பாடே இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், தமிழ் அரசியல் தரப்புக்கும் இடையிலான சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது." என்றார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகளை உற்றுநோக்கும் இந்தியாவானது, அதன் காய்நகர்த்தல்களை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
