இலங்கை இராணுவத்தின் திறன் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா உறுதி!
பாதுகாப்புத்துறையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் அடையாளம் காணவும் இந்திய உயர்ஸ்தானிகரகம் இன்று கொழும்பில் இந்தியா-இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்வில் இந்திய பாதுகாப்பு தொழில்துறை, இலங்கை தொழில்முனைவோர், இலங்கை ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் இரு நாடுகளின் திறன்களை எடுத்துக்காட்டும் கருத்தரங்கும் அடங்கியிருந்தது.
இலங்கை ஆயுதப்படைகளின் திறன் மேம்பாடு
இந்திரா ராடார், மேம்பட்ட கடல் ரோந்து கப்பல்கள், எல்70 துப்பாக்கிகள், டோர்னியர் விமானம் மற்றும் இராணுவ பயிற்சி உபகரணங்கள்; போன்ற பரந்த அளவிலான இந்திய பாதுகாப்பு உபகரணங்களை இலங்கை ஆயுதப்படைகள் வெற்றிகரமாக இயக்கி வருவதாகவும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தும் வகையில் மிதக்கும்
கப்பல்துறை, கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் டோர்னியர்
விமானங்களை இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளதையும் இந்திய உயர்ஸ்தானிகரகம்
சுட்டிக்காட்டியுள்ளது.