இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தினை ஆரம்பிக்கும் இந்தியா கப்பல்
இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தற்போது உள்நாட்டு இடங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
கப்பல் பயண அறிமுகம்
இந்த கப்பல் கோர்டேலியா ஜூன் 5-ம் திகதி சென்னையில் இருந்து புறப்படவுள்ளது.
இலங்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூன் 7 ஆம் திகதி, இந்த கப்பல் பயண அறிமுகத்தை
குறிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து
கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.