கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை!
கொழும்பு துறைமுகத்தில் போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலையை நிறுவ இந்தியா தயாராகி வருவதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை திசைக்காட்டி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் முக்கியமானவர்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடன் தனிப்பட்ட தொடர்புகளை கொண்ட பல அமைச்சர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கையெழுத்தான ஒப்பந்தம்
இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை ஏழு என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்திய ஊடகங்கள் 10 என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய இராணுவ ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை நிறுவுவது குறித்த விவரங்களை இந்திய பாதுகாப்புச் செயலாளரே இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri