ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இழைத்த துரோகம்!-செய்திகளின் தொகுப்பு
இந்தியா தமிழீழ விவகாரத்தில் வஞ்சகமும் துரோகமும் செய்தது என தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி குற்றம்சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவருக்கு 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று(26) அதன் பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டி கொண்டாடியதுடன் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட வைகோ, "தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர். இலங்கை படைகள் இயக்கத்தின் படைகளை தோற்கடித்திருக்க முடியாது.
போரிலே பின்னடைவு ஏற்பட்டாலும் கடைசி வரை மக்களை பாதுகாப்பதிலே அவர் கவனமுடன் இருந்தார். ராஜபக்ச கூட்டம் இன படுகொலை செய்துவிட்டு ஜெனீவா மனித உரிமைகள் மன்றத்தில் இன படுகொலை நடக்கவில்லை எனக்கூறி வருகிறது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
