காசா போர் நிறுத்தம் தீர்மானம் : தலையீட்டை தவிர்த்த இந்தியா
பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை, இந்தியா தவிர்த்துக் கொண்டது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 அக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம்
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின், பொது சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தின் உள்ளடங்கல்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில். 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்காளிப்பை தவிர்த்தன.
இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்காளிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஷாருக் கான் வீட்டில் வேலை செய்பவருக்கு House rent இத்தனை லட்சமா.. கடும் அதிர்ச்சி ஆன ரசிகர்கள் Cineulagam

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
