இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் விரர் டேவிட் ஜோன்சன்( David Johnson) மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அவர் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தின் நான்காம் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டேவிட் ஜோன்ஸன் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணியை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்து சம்பவம், பெங்களுருவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மரணம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அண்மைய நாட்களாக ஜோன்சன் நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும் கடந்த வாரமும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன்சனின் மரணத்திற்கு இந்திய கிரிக்கட் வீரர்கள் பலர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக அணியின் சார்பில் அபார திறமைகளை வெளியிட்டுள்ள ஜோன்சன், முதல்தரப் போட்டிகளில் 125 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam