இந்து சமுத்திரத்தில் கண்காணிப்பை அதிகரிக்கும் இந்தியா
இலங்கைக்கு அருகில் உட்பட இந்து சமுத்திரம் முழுவதும் தனது கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்காக Predator ரக ட்ரோன் விமானங்களை பயன்படுத்த உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் செயற்பாடுகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் இதன் காரணமாக காண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய கடற்படை கூறியுள்ளது.
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறித்து கூடிய கவனத்தை செலுத்த இந்த ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்படும் என இந்தய கடற்படையின் பிரதி தளபதி வைஸ் அத்மிரல் பீ. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா, இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவிடம் இருந்து 30 ட்ரோன் விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் சென் டியாகோ அணுசக்தி நிறுவனம் தயாரித்துள்ள MQ-9B ரக ட்ரோன் விமானத்திற்கு 48 மணி நேரம் தொடர்ந்தும் ஆயிரத்து 700 கிலோ மீற்றர் விரை பறக்கும் திறன் உள்ளது.
அத்துடன் ஏவுகணை உட்பட பயங்கரமான ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் இந்த ட்ரோன் விமானங்களுக்கு இருப்பதே பாரதூரமான விடயமாக கருதப்படுகிறது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan