போர்க்கால அடிப்படையில் இலங்கையில் மீட்பு பணிகளில் இந்தியா: இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள்

Kandy Anura Kumara Dissanayaka Sri Lanka India Weather
By Kajinthan Nov 30, 2025 11:09 AM GMT
Report

"டித்வா" புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு கோரத் தாண்டவத்தினால் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி இந்தியாவானது போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என தென்னிந்திய பிரபல இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

டித்வா புயலின் கொடூர தாக்குதலில் இலங்கையில் இதுவரை 200 பேர் வரை உயிரிழந்ததாகவும், 130 பேர் வரை வெள்ளத்தில் காணாமல்போனதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துபோது மனம் வேதனையாக துடித்துப்போனது.

பேராதனை மண்சரிவில் 24 பேர் பலி! மேலும் பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல்

பேராதனை மண்சரிவில் 24 பேர் பலி! மேலும் பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக தகவல்

போர்க்கால அடிப்படையில் இலங்கையில் மீட்பு பணிகளில் இந்தியா: இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள் | India In Rescue Operations In Sri Lanka

துயர சம்பவத்திற்கு பேரிழப்பு

இந்த துயர சம்பவத்திற்கும் பேரிழப்பிற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். கண்டி மாவட்டத்திலேயே அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

எனவே அந்த மாவட்டத்திற்கு அநுர அரசு அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதுபோல ஏனைய இடங்களுக்கும், எமது தாய்த் தமிழீழ மக்களின் பூர்வீக பகுதிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐந்தறிவு உள்ள மிருகங்கள் கூட செய்வதறியாது வீதிகளுக்கு வருகின்றதையும், வீடுகளுக்கு மேலே ஏறி பதற்றத்தோடு நின்று கொண்டிருப்பதையும் ஊடகங்கள் வாயிலாக பார்க்கும் போது எமது மக்களின் நிலை குறித்து நினைத்துப் பார்க்கவே மனம் தவித்துப்போகிறது.

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கும் எம் தமிழீழ உறவுகளுக்கும் இந்திய ஒன்றிய அரசானது விரைந்து சில உதவித் திட்டங்களை வழங்கியதை வரவேற்கிறேன்.

போர்க்கால அடிப்படையில் இலங்கையில் மீட்பு பணிகளில் இந்தியா: இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள் | India In Rescue Operations In Sri Lanka

தமிழ் நாடு அரசும் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டும்

அதேபோன்று எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு தமிழ்நாடு அரசும் உடனடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைத்து மிக விரைவாக இந்திய பிரதமர் மோடி அவர்களை சந்தித்து நெருக்கடியானதொரு பேச்சுவார்த்தையினை நடத்தி ஒரு மீட்பு குழுவினரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். உணவு, உடை தேவைகளுக்கு அப்பால் அங்கு பரிதவித்து நிற்கும் மக்களின் பாதுக்காப்பினையும் உறுதிப்படுத்த இந்தியா போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அநுர அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

போர்க்கால அடிப்படையில் இலங்கையில் மீட்பு பணிகளில் இந்தியா: இயக்குநர் வ.கௌதமன் வேண்டுகோள் | India In Rescue Operations In Sri Lanka

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு களங்கம்

இருப்பினும் அநுர அரசின் செயற்பாடுகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னைய ஆட்சியாளர்களின் குழுவினர் சூழ்ச்சியுடன் செயற்படுகின்ற விடயமும் தெரியவருகின்ற பொழுது இயற்கை பேரழிவை விட மேலான பேரழிவு என மனம் கசந்து போகிறது. யாராக இருந்தாலும் உயிர்களுடன் விளையாடாதீர்கள்.

இவ்வாறான தரப்பினர் குறித்து அநுர அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் தவறான நோக்கங்களை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் போனால் அது அநுர அரசுக்கு களங்கம் என்பதுடன் அது ஆபத்தாகவும் அமையக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது.

இந்தியா என்ற சகோதரன் எப்போதும் தமக்காக நேசக்கரங்களை நீட்டுவதற்கு தயாராக உள்ளான் என்ற நம்பிக்கை எமது இலங்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா விரைந்து செயற்பட்டு, ஈழத்து உறவுகளின் பாதுக்காப்பை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள்

சற்றுமுன்னர் மாத்தளையில் பாரிய நிலச்சரிவு: தீவிரமடையும் மீட்பு பணிகள்

பாதுகாப்பற்ற இடங்களுக்கு வரவேண்டாம் : பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

பாதுகாப்பற்ற இடங்களுக்கு வரவேண்டாம் : பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US