பொத்துவில்-முஹுது மஹா விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர்
பொத்துவில்- முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் நேற்றையதினம் (28.10.2025) மேற்கொண்டுள்ளார்.
குறித்த விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அவரது பாரியாரும் சென்று விகாரையின் விகாராதிபதி வரக்காபொல இந்திரசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் விகாரை தொடர்பான குறைபாடுகளை கேட்டறிந்ததோடு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இதன்போது விகாராதிபதி தனது விகாரை தொன்மையான வரலாற்றை கொண்டதாகவும் விகாரைக்குரிய காணிகளை சிலர் அபகரித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்கள் பாதுகாத்து அதனை மக்கள் பார்வையிட செய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன் அந்த பகுதியில் மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாகும் என்றும் கூறியுள்ளார்.

எனவே இந்த தொல்லியல் இடங்களை பாதுகாக்க அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்து பாதுகாக்க அரசாங்கத்திடம் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய உயர்ஸ்தானிகர் விகாரைக்கு சூரிய மின்சாரம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதி அரசாங்கத்திடம் வழங்கியுள்ளோம் என்றும், மிகுதி பணம் மிக விரைவில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan