இலங்கைக்கு அவசர பொருளாதார உதவி வழங்குவது குறித்து இந்தியா தீவிர கவனம்
இலங்கைக்கு அவசர பொருளாதார உதவிகளை வழங்குவது குறித்து இந்திய மத்திய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உணவு,சுகாதாரம் மற்றும் எரிபொருள் ஆகிய துறைகளுக்கு உதவத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, நிதி உதவி கோரியிருந்தார்.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு அவசர பொருளாதார உதவிகளை வழங்கும் பொறிமுறைமை குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா நிதி உதவி வழங்க உள்ளது.