காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல்! மூவரும் பாகிஸ்தானியர்கள் என அறிவிப்பு
இந்திய காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல் நடத்தியவர்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளும், ஐக்கிய நாடுகளால் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள் என்று இந்திய புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானியர்கள்
முன்னதாக, இந்திய காவல்துறையினர் மூன்று பேரின் புகைப்படங்களை வெளியிட்டு, அதில் இருவர் பாகிஸ்தானியர்கள் என்றும், ஒருவர் உள்ளூர் நபர் என்றும் கூறியிருந்தனர்.
எனினும் தற்போது, குறித்த மூவரும் பாகிஸ்தானியர்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அதிகாரிகளின், இந்த கூற்று குறித்து பாகிஸ்தான் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.