இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு!
இந்திய இராஜதந்திர நகர்வுகளில் இம்முறையும் இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றிய நிர்மலா சீத்தாராமன் இந்த விடயத்தை முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, இலங்கைக்கான உதவியில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.
300 கோடி இந்திய ரூபா
2025 ஆம் ஆண்டுக்கான இந்திய வரவு செலவு திட்டதில் முந்தையதைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டமையை இங்கு அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், தற்போது இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்மையும் தமது நாடு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri