மட்டக்களப்பில் சுயேட்சை குழுவாக களமிறங்கும் இளைஞர் யுவதிகள் (Photos)
மட்டக்களப்பு வாகரை கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக, சுயேட்சை குழுவாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் இயக்கம் மற்றும் நீதிக்கும் சமத்துவத்துக்குமான கனடியர் அமைப்பினரின் பங்களிப்புடன் சுயேட்சை குழுவாக இளைஞர் யுவதிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல்

இன்றைய தினம் (20.01.2023) மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதுடன் நாளைய தினம் (21.01.2023) அவர்களது வேட்பு மனுத் தாக்கலை செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சுயேச்சை குழு இலங்கையில் புத்தளம் மற்றும் வன்னி, மட்டக்களப்பு போன்ற இடங்களில் போட்டியிடுகின்றது.
சுயேட்சை குழுவாக களமிறங்கல்
கடந்த காலங்களில் வாகரை பிரதேசத்தில் தங்களுக்கான நீதிகள் மறுக்கப்பட்டதன் காரணமாக தாங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்வாங்கி தங்களது கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறித்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
அபிவிருத்தி எனும் போர்வையில் அதிகளவான காணி மற்றும் கிராமத்துக்கு பயன்படாத அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதன் காரணமாக தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதால் தாமாகவே களம் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri