இலங்கையின் சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்படவில்லை:நிரோஷன் பெரேரா
இலங்கையில் செயற்படும் சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்படவில்லை என்று புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய சட்டவிதிகள்
இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்துகொள்ளவில்லை எனவும் சுயாதீன ஆணைக்குழு சபை பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டவிதிகளை உருவாக்குவதை விட இருக்கின்ற சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |