சுதந்திர தின நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் கலாசாரம் (Photos)
வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டதுடன், தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02) இடம்பெற்றது.
இதன்போது நிகழ்வுக்கு அழைத்து வரப்பட்ட மதகுருமார்களில் பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதகுருமார்களுக்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தைதைப் போன்று சாதாரண இருக்கைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் மூவின மக்கள், நான்கு சமயங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் வவுனியா மண்ணில் பௌத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதகுருமார்களுக்கு அவர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.
கலாசாரத்தை வெளிப்படுத்தும் நாட்டிய, நடன நிகழ்வு இடம்பெற்ற போது சிங்கள கலாசார நடனம் முதலாவதாகவும், இஸ்லாமிய காலாசார நடனம் இரண்டாவதாகவும் இடம்பெற்றதுடன் தமிழ் கலாசார நிகழ்வு மூன்றாவதாக நடந்துள்ளது.
வவுனியாவில் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருவதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி உள்ளிட்ட அதிகளவானர்கள் தமிழர்களாக இருந்த நிலையில் தமிழ் காலாசாரத்தை மூன்றாம் நிலைக்கு கொண்டு சென்றமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்னளனர்.






நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam