அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல்

Sri Lanka Upcountry People Sri Lanka Politician Central Province
By Shan Feb 04, 2023 09:08 AM GMT
Report

மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினமானது மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என மலையக சமூக ஆய்வு மையத்தின் ஆலோசகரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (03.02.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் இந்நாட்டில் தங்களின் 200 வருட வரலாற்று வாழ்க்கையில் சிதைக்கப்பட்டவர்களாகவும், பல்வேறு விதமான திட்டமிட்ட ஒடுக்குதலுக்கு முகம் கொடுத்த மக்களாக காணப்படுகின்றனர்.

அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல் | Independence Day Black Day For Upcountry People

மலையக மக்களின் வாழ்வியல்

இந்நிலையில் சலனமற்ற இனவழிப்பிற்கும் முகம் கொடுக்கின்றவர்களாகவும், அரசியலுக்கு தூரமாக்கப்பட்டவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய  கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலகின் நவீன அடிமைத்தனம் தொடர்பில் தேடுவதற்காக இலங்கை வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதி டொமொயா ஒபக்டா "மலையக மக்கள் தமிழர்கள் என்பதற்காகவும், தொழிலாளர் என்பதற்காகவும் அடிமைத்தனத்திற்கு உட்பட்டு இருக்கின்றனர்" என இலங்கையிலிருந்தே கூறியதோடு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையிலும் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மலையக மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் மட்டுமல்ல அவர்களின் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினர்களானவர்களும் 75வது சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளாது சுதந்திரமற்ற மலையக மக்களின் ஆதங்கங்களையும், எதிர்ப்புகளையும் வெளிகாட்ட வேண்டும் என மலையக சமூக ஆய்வு மையம் கோரிக்கை விடுக்கின்றது.

அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல் | Independence Day Black Day For Upcountry People

இந்நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பாரிய மக்கள் பேரணியும் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார கொள்கையாலும், அரசியல்வாதிகளின் மக்கள் சொத்து கொள்ளை காரணமாகவும், வறுமைக்கு தள்ளப்பட்ட மக்கள் கொழும்பு தலைநகரம் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அறிவித்து அமைதி போராட்டங்களையும் ஆயத்தப்படுத்தியுள்ளனர்.

பிரஜா உரிமை

இனப்படுகொலை, தொடர் இன அழிப்பு என்பவற்றை சந்தித்து வரும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க கூடாது என்பதே மக்களுடைய வேண்டுகோள்.

சுதந்திர இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத்திலேயே மலையக மக்களின் சுதந்திர வாழ்விற்கு ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வாக்குரிமை சட்டம், தொடர்ந்து கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை சட்டம் காரணமாக உழைத்து உரமான நாட்டில் அன்னியர்களாக்கப்பட்டனர்.

அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல் | Independence Day Black Day For Upcountry People

தொடர்ந்து இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக பாரிய மனித உரிமை மீறலுக்கும் உட்பட்டனர். இதுவும் இன அழிப்பின் முகங்களே.

கடந்த 1922ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெருந் தோட்டங்கள் அரசுடையாக்கப்பட்டபோது கிராமங்களை அண்டிய தோட்டங்களில் இருந்தோர் பலவந்தமாக தோட்டங்களை விட்டு துரத்தப்பட்டனர்.

பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அடையாளங்களை இழந்து அடையாளங்களை மறைத்து இன்றும் வாழ்வதைக் காணலாம். அதனைத் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தம் என உருவாக்கப்பட்ட பஞ்சம் காரணமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பலவந்தமாக வறுமைக்குள் தள்ளப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் பசியின் காரணமாக வீதிகளில் வீழ்ந்து இறந்தனர்.

மலையக பிரதேசத்தில் வாழும் சூழ்நிலை இல்லாத காரணமாக வடக்கு, கிழக்குக்கு இடம்பெயர்ந்தோர் இன்றும் அரசியல் அனாதைகள் ஆகியுள்ளனர். இவர்களில் யுத்தம் காரணமாக பாதுகாப்புதேடி இந்தியாவிற்கு சென்றோர் முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 1987ஆம் ஆண்டு நாட்டின் நிர்வாகம், அபிவிருத்தி என்பவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளையும் அதன்மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய அபிவிருத்தி செயற்பாடுகளையும் அடைய முடியாத அளவிற்கு அதன் சட்டங்கள் மலையகப் பெருந்தொட்ட மக்களுக்கு எதிராக உள்ளது.

அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே: மா.சக்திவேல் | Independence Day Black Day For Upcountry People

தேசிய இனமாக அங்கீகாரம் கோரும் மலையக மக்கள்

இவ்வாறு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கடந்த1889 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய தொழிலாளர் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட மக்கள் தனியார் நிலங்களில் வாழுகின்ற மக்களாக இன்றும் கணிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். இவர்களுடைய வாக்குகள் தேவையாக இருக்கின்றது.

ஆனால் இவர்கள் வாழும் பிரதேசம் அபிவிருத்தி அடையக் கூடாது, அரச நிர்வாக சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதே பேரினவாதிகளின் நோக்கமாகும்.

இந்த சட்டங்கள் திருத்தப்பட்டு மலையக மக்கள் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனமாக அங்கீகரிப்பட்டு அரசியல் கௌரவம் அடையும் வரை சுதந்திர தினம் மலையக மக்களுக்கும் கறுப்பு தினமே என குறிப்பிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, புளியங்கூடல், வண்ணார்பண்ணை

11 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், தையிட்டி, வண்ணார்பண்ணை

14 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US