பெண்களின் உடல் பருமன் தொடர்பில் விசேட ஆய்வில் வெளியான தகவல்
இலங்கை போஷாக்கு நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில் சுமார் 50% பெண்கள் பருமனாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் கலாநிதி திமதி விக்கிரமசேகர கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"உடல் பருமன் இந்த நாட்டில் மறந்துவிட்டது. நாம் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பேசுகிறோம். ஆனால் குழந்தை பருவ உடல் பருமனும் அதிகரித்து வருகிறது.
அதிக எடை மற்றும் பருமன்
கிட்டத்தட்ட 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள். இதனை கண்கானிக்க இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு அமைப்பு தேவை.
எவ்வாறாயினும், இலங்கையில் போசாக்கு குறைபாடு காணப்படுகின்ற போதிலும், பெண்களை பொருத்தவரையில் போஷாக்கு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
