யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம் (Photos)
யாழ்.மாவட்டத்தில் சமீப காலமாக டெங்குநோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக செங்கற்படை மஹாதேவா பிள்ளையார் ஆலய அருகிலுள்ள காணியில் பெருமளவான இளநீர் கோம்பைகள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு டெங்கு நுளம்பு பரவும் பேரபாயம் காணப்படுகின்றது.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டதும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஏழாம் வட்டாரத்தில் ஜெ/179 கிராமசேவகர் காணப்படும் இக்காணியில் ஆலய பூசைகளின்போது பயன்படுத்தப்பட்ட இளநீர் குரும்பைகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரு மரணங்கள்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியல் சுமார் 3100 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வாரங்களில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் உச்சங்கண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரும் அறிவித்திருந்தார். சமீபத்திய தகவலின்படி கிட்டத்தட்ட 1000பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
