கட்டுநாயக்கவில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்
கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்றைய தினம் 86 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 79 பேர் கட்டுநாயக்க சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் இந்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 2 ஆயிரத்து 600 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் நேற்றை தினம் 7 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களுடன் சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள 64 தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்து 382 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சீதுவை பிரதேசத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.