அதிகரிக்கப்பட்ட சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்
யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று (29.01.2024) கூறியுள்ளார்.
மேலும், கட்டணமானது 2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக் கட்டணம்
அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும், ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபாய் வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000இல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
